இம்மலை ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ளது. கார்த்திகை அன்று மலைமேல் பெரிய பாத்திரம் ஒன்றில் நெய் ஊற்றி, எட்டு முழ வெள்ளை துணியை திரியாகயிட்டு ஏராளமான கற்பூரத்தை சொரிந்து விளக்கிடு செய்வார். இது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் இச்சோதி ஒளிவீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும்தீபம் ஏற்றி வழிபட முடியாத இடங்களில் சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்னர் பனையால் சொக்கப்பனை வேய்ந்து சுவாமியை எழுந்தருளப் பண்ணிச் சொக்கப்பனையைக் கொளுத்துவார்கள்.சொக்கப்பனை ஏக ஜோதிமயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனை வணங்குவது சொக்கப் பனையாகும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது.பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில், ''வேலின் நோக்கிய விளக்க நிலையும்'' என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள். பண்டைக் காலம் தொட்டேகார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.பழைய காலங்களில் மலைச்சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு, களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு.ஆகவே, மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது  ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகிறது

Leave a Reply